ஞாயிறு, 9 அக்டோபர், 2011

காதல் கற்கள்...

அன்பே!

என்
இதயக்குளத்தில்
உன்
காதல் கற்கள்..

விழுந்ததால்
எழுந்ததோ
உணர்ச்சி
நீரலைகள்..

அதில்
உடைந்த
நீர்க்குமிழிகளாய்
நம்
நிராசை
கனவுகள்..

இன்று
சகலமும்
முடிந்து
சலனங்கள்
தெளிந்து

மீண்டும்
அமைதியாய்
என்
இதயம்..

ஆனால்
கற்கள்
மட்டும்
அடிமனதில்
ஆழமாய்..




என்றென்றும் அன்புடன்.
இரா. கு. இராம் சுந்தர்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக