சனி, 14 செப்டம்பர், 2013

கணங்களிலிருந்து...

எத்தனை
முறை
ஏற்றி
விட்டாலும்

அத்தனை
முறையும்
நழுவி
விழும் ...

யானை
சவாரி
செய்யத்
தெரியாத

எங்கள்
வீட்டு
பூனைக்குட்டி...

தன்
தாயின்
முதுகிலிருந்து.

அப்படித்தான்
விழுகிறேன்.
நானும்
என் கணங்களிலிருந்து

மாலை
வேளையில்
சாரல்
மழையில்
பேருந்து ...
பயணம்..

அந்திச்
சூரியனை
உள்வாங்கி
ஒளிர்ந்து

ஒன்றன் 
பின்
ஒன்றாய்
ஜன்னல்
கம்பியில்
மிதந்து

ஒன்றினுள்
ஒன்று
நுழைந்து

சற்றே
கனமாய்
உதிர்ந்து
விழும்
ஒற்றை
நீர்த்திரள்..

அப்படித்தான்
உதிர்கிறேன்
நானும்
என் கணங்களிலிருந்து

இன்னமும்
இருக்கிறேன்
ஈரத்தின்
மிச்சமாய்..


கூட்டல்
பெருக்கல்
வகுத்தல்
ஏதுமற்ற
வெற்றுப்
புள்ளி
கற்றை
தாள்களில்

யாதுமற்ற
மோன நிலையில்
மீதம்
பார்த்த
ஈவுத் தொகையின்
மொத்தப்
பிழையாய்
கழிகிறேன்
நான்
 என் கணங்களிலிருந்து

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

மே 17...மெரினா மணல்வெளி.... காற்றும்..நானும்..



அன்றைய
மாலைப்பொழுதில்
க்ண்களின் சந்திப்புகளில் 
சோகம் த்தும்பியது..

முகமறியா நட்புகளின்
கரங்கள் இணைந்தபோது  
அங்கு மெழுகுதிரிகளின்
பரிமாற்றம் நடந்தது...

அப்படித்தான்
நானும்
ஒரு
காதல் இணைக்கு
மெழுகுதிரி கொடுக்க
அணுகினேன்..

அமிலம்
அலையாய்
வந்த்துபோல்
அவசரமாய்
அவர்கள் 
நகர்ந்தார்கள்...

இன்னொரு
சுனாமி வந்து
உங்களை மட்டும்
கொண்டு போக
என்று
சபித்தபடியே - நான்
திரும்பும்போது 

ஹ,,ஹ ஹா...
என்று ஒரு
எக்காளச்
சிரிப்பு.. 

சிரிப்பின்
திசை நோக்கினேன்
உருவம் இல்லை
சத்தம் மட்டும்
தொடர்ந்த்து...

யார் நீ?
என்றேன்..
நான்தான்
காற்று
என்றது..

ஓ..
உடையை விலக்கி
உடலை வருட
உலகம் அங்கீகரித்த
அயோக்கியனல்லவா நீ..

என்னைப்
பார்த்து சிரிப்பது
ஏன்?
என்றேன்.

பின்
என்ன செய்யச்
சொல்கிறாய்..

ஆண்டுக்கொருமுறை
அழுது புலம்ப
அவ்ர்கள் இட்த்தை
நீ 
எடுத்துக் கொண்டு
அவ்ர்களையே
சபிக்கிறாய்..

என்றவாறு
மீண்டும் சிரித்த்து..

சிரி....
இன்னும்
சத்தம் போட்டு
சிரி....

யாராவது உன்னை
பலூனில் அடைத்து
யாரிடமாவது  
விற்று விடட்டும்
என்றேன்..
எரிச்சலுடன்..

சரி ..சரி..
கோபப்படாதே....
என்றது..

அப்போது
மேனியில்
விழுந்த
சிறு தூறல்
என் வெப்பம்
தணித்தது..

பார்
வருணனின் அஞ்சலி..
உனக்குதான் மனமில்லை
ஈரமே இல்லாத காற்று
நீ
என்றேன்..

எரிந்து
கொண்டிருந்த
என்
மெழுகுதிரியை 
ஊதி அணைத்தது
காற்று..

இரவு
வந்து விட்டாலே
விளக்கை  
அணைப்பதைத் தவிர
வேறு வேலை உனக்கில்லையா?
என்றேன்..

அடிமுட்டாளடா நீ

இயற்கை
சொல்லும் சேதி
என்னவென்றே
புரியாத
அடிமுட்டாளடா நீ

ஆக்ஸிஜனை
உட்கொண்டு
கார்பன் டை ஆக்ஸைடை
வெளியேற்றிடும்
அதிசய மரமடா நீ..
என்றது..

அதிர்ந்து
போனேன்..

என்
இயலாமை
அழுகையாய்
வெடித்தது..

விழி நீர்
வடிகால் வாரியமே
நிறுத்து
உன் விசும்பலை..
என்றது..

பிணங்கள்
வழிந்த
குழிகளில்
முதல்
சவமாய்
நீ
கொன்று புதைத்த
ஒற்றுமை.

இனியாவது
ஒற்றை
மெழுகுதிரியை
விட்டு விட்டு
கற்றை
மெழுகுதிரிகளை
கையில் .
ஏந்து..

தீப்பந்தமாய்
ஒளியேற்று
காற்றைச் சுடு
நீரை ஆவியாக்கு.

சமுத்திரம்
பிளந்து
பாதை
தெரிந்த
அற்புதம்
இன்னொருமுறை
நிகழட்டும்..

என்று
ஆவேசமாய்
முடித்தது..

நான்
அமைதியாக

உனக்கு
அரசியல்
தெரியுமா?
என்றேன்..

திகைத்துப் பார்த்தது

இலங்கையில்
வழிந்த
இரத்தத்தை
முகர்ந்து பார்..
அதில்
இருக்கும்
எங்கள்
இந்திய அரசியலின்
வீச்சம்...

எங்களுள்
பிரபாகரன்கள்
இல்லை..
ஆனால்
கருணா க்கள்
அதிகம்
என்றேன்.

மூச்சற்று
நின்றது காற்று..

மீண்டும்
ஒற்றை
மெழுகுதிரியை
கையில்
எடுத்தேன்

அழுது
புலம்ப
ஆயத்தம்
ஆனேன்.

இன்னொரு
சுனாமி
வந்து
உங்கள்
அனைவரையும்
கொண்டு போக..

என்று
சபித்தபடி
நகர்ந்தது
காற்று...

என்றென்றும் அன்புடன்,
இரா. கு. இராம் சுந்தர்.
















ஞாயிறு, 9 அக்டோபர், 2011

காதல் கற்கள்...

அன்பே!

என்
இதயக்குளத்தில்
உன்
காதல் கற்கள்..

விழுந்ததால்
எழுந்ததோ
உணர்ச்சி
நீரலைகள்..

அதில்
உடைந்த
நீர்க்குமிழிகளாய்
நம்
நிராசை
கனவுகள்..

இன்று
சகலமும்
முடிந்து
சலனங்கள்
தெளிந்து

மீண்டும்
அமைதியாய்
என்
இதயம்..

ஆனால்
கற்கள்
மட்டும்
அடிமனதில்
ஆழமாய்..




என்றென்றும் அன்புடன்.
இரா. கு. இராம் சுந்தர்.
 

சனி, 1 அக்டோபர், 2011

விற்பனைக்குச் சில முகமூடிகள்......

ஏறிய இடம்
திரும்ப வராது .
இறங்கும் இடமும்
தெரியாது..

இப்படி
செல்கிறது
என் வாழ்க்கை
பயணம்...

இதில்
என்னுடன்
பயணித்த
இவர்கள்

நிஜங்களில்லா
கரும் நிழல்கள்
முகமே   இல்லாத்
வெறும் முகமூடிகள்....

பாசமாய்
நேசமாய்
என்னுடன்
பயணித்து

இறங்குமிடம்
வந்ததும்
கண நேரத்தில்
என்
இதயத்தை
நசுக்கி

அதில்
வழிந்த
இரத்தத்தில்
விரல்களை
நனைத்து

தங்கள்
கைரேகை
முத்திரையுடன்
கழற்றித் தந்த
முகமூடிகள்....

மீண்டும்
அடுத்த
நிறுத்தம்
மற்றொரு 
பயணி...
  
இதனால்
என் பயணம்
தாமதப்பட்டதே - அன்றி
தடைபடவில்லை ...

இந்த
நினைவுகள்
பின்னோக்கிச்
செல்லும்
புகையைப்போல...
என் 
பயணமோ
முன்னோக்கிச்
செல்லும்
இரயிலைப் போல....

மீண்டும்
அடுத்த நிறுத்தம்
மற்றொரு பயணி
மேலுமொரு முகமூடி...

இந்த
அனுபவங்களின்
உராய்வில்
புரிந்தது
வாழ்வின்  இரகசியம்...

இன்று
என்னிடமும்
பல
முகமூடிகள்...


உறவுகளுக்காய்  ஒன்று
நட்பில் தோய்த்த ஒன்று
கனிவும் கருணையுமாய் ஒன்று
வஞ்சக சூழ்ச்சியுடன் ஒன்று

அடிமையாய்,
அடக்குபவனாய்,
பாமரனாய்,
பகுத்தறிவாளனாய்.

இப்படி
என்னிடமும்
பல முகமூடிகள்..

எது வேண்டும் உங்களுக்கு?...


என்
இப்போதைய
முகமூடி

ஒரு கவிதை சொல்ல முயற்சிப்பவனாக....  

வாங்கிக் கொள்கிறீர்களா?



என்றென்றும் அன்புடன்,
இரா. கு. இராம் சுந்தர்.


 

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

வேறு தேசம் செல்லுங்கள்...

வல்லினம்,
மெல்லினம்,
இடையினம்..

இதற்கு
வளைய மறுக்கிறதா ?
உங்கள் நாக்கு !
இணைந்து
பிரிய மறுக்கிறதா ?
உங்கள் உதடுகள் !! 

கவலையை விடுங்கள்..

சிறந்த
எதிர்காலம்
சின்னத்திரையில்
உங்களுக்கு...


வேதியல்
மாற்றப் பொருளா என்ன
நம் தமிழ்
வேக வைத்து
தின்பதற்கு ..

யோசித்துப்
பார்த்ததில்
பெரும் வேதனைதான்
எங்களுக்கு..

கொலை செய்யக்
கூலி பெறும்
கலிகாலக் 
குமரிகளே..

குழந்தை மொழியின்
மழலைத் தடுமாற்றம்
யாழை விட இனிதென்பதை
பாழாய்ப் போன - நீர்
தவறாய்ப் புரிந்து
கொண்டீர்...

சிக்கனப் பேச்சு நன்று
அதனால்
' க் ' கன்னாவை
விட்டுப் பேசு என்று
கற்றுத் தந்தது
யார் இன்று? 

குறைத்தல்
என்பதை
உங்கள் உடையோடு
கொள்ளுங்கள்..
ஓங்கி உரைத்தல்
என்பதே
எம் தமிழுக்கு
அழகு..

வெட்டி வீசுதலை
உங்கள்
கேசத்தோடு
நிறுத்துங்கள்
எங்கள்
(சு)வாசத் தமிழில்
வேண்டாம்..

நேசத்தோடு  சொல்கிறோம்..

வெல்லத் தமிழை
நல்லப் படித்து
கன்னல் மொழி
பேச வாருங்கள்...

இல்லையேல் ...

வேறு தேசம் செல்லுங்கள் ..

என்றென்றும் அன்புடன்,
இரா.கு.இராம் சுந்தர்.

வியாழன், 8 செப்டம்பர், 2011

முடமாய்ப் போவேனோ?

இழப்புகள்
மட்டுமே
புரிதல்களைத் 
தரும் 

அந்தப்
புரிதல்களின்
நீளம் அளப்பதற்குள்
மீண்டும்
இழப்புகள் வரும்...

இழப்புகளும் 
புரிதல்களும்
இடைவெளி சமமின்றி
சுனாமியாய் சுற்றியடிக்க

முள் வேலி முகாமிற்குள்
என் மனது..

முடமாய்ப் போவேனோ?
வாழ்க்கை சூட்சமம் அறிவதற்குள்...



என்றென்றும் அன்புடன்
இரா. கு. இராம் சுந்தர்
 

யாரோடு நான் பேசுவேன்....


நிலவை விட
மெல்லிய வெளிச்சமாய்
எரிந்து கொண்டிருந்தது
ஒற்றைத் தெருவிளக்கு !

காது மடலை
குளிரச் செய்யும்
ஜில் என்ற
தென்றல் காற்று!

பனியில் நனைந்தும்
மழை வேண்டி
மந்திரம் ஓதும்
தவளைகள் சத்தம்!..

ரம்மியமான - இந்த
இராத்திரி வேளையை
ரசித்து - நான்
நடந்து வந்தேன்....

தெரு விளக்கைத்
தாண்டுகையில்
அதன் அடியிலிந்து - ஓர்
அழைப்புக் குரல்.

ஒரு குட்டி நாயின் செல்ல முனகல்.....

விரல் சொடுக்கினேன்
தலை திருப்பியது
எட்டி நடந்தேன்
தாவி தொடர்ந்தது...

கையில் எடுத்து
மார்பில் அணைத்து
கதவைத் திறந்து
வீட்டில் நுழைந்தேன்..

நடுங்கிய உடலுடன்
இடுக்கிய கண்களால்
விளக்கின் வெளிச்சத்தில்
என் முகம் பார்த்தது.

பல நாள் பழகி
வெகு நாள் பிரிந்து -
மீண்டும்
சந்தித்த இருவரின்
சந்தோஷத்தைப்போல
அது
என் முகமெங்கும்
முகர்ந்து பார்த்து
பாசமாய் நக்கியது...

என்
தலை முடியை
கவ்விப் பிடித்து
சண்டைக்கு இழுத்தது ..
கைகளில் இருந்து
இறக்கி தரையில்
விட்டேன் - அது
வீடெங்கும் ஓடியது ...

பால் ஊற்றினேன்
வேகமாய் குடித்து
இரண்டு தும்மல்
போட்டது..
யாரோ நினைக்கிறார்கள்
என்று எண்ணி
அதன் தலையில் தட்டினேன்
என் விருந்தோம்பலுக்கு
நன்றி சொல்லி
வாஞ்சையுடன் வாலாட்டியது..

கை கொடுக்கச் சொல்லி
உள்ளங்கை நீட்டினேன்
பாய்ந்து வந்து -
என்
விரலைக் கவ்வியது
வலியின் வேதனையில்
நான் குரல் கொடுக்க
தன்
நாக்கால் நக்கி
ஆறுதல் தந்தது..

ஆசையுடன்
நான்
உடம்பைத் தடவினால்
மீண்டும்
என்
விரலைக் கடித்தது..

சில நிமிட நேரங்கள்
நான்
எஜமானனாகவும்
பல மணி நேரங்கள்
நான்
பணியாளனாகவும்
பழகிட நேர்ந்தது...

இப்படியாய்
எங்கள் உறவு
சிறுக சிறுக
இறுகியது..

அதற்கு
என்ன பெயர் வைக்கலாம்
என்று எண்ணியபடியே
நான் தூங்க -
அது
என்
காலடியில்
விழித்திருந்தது...


விடிந்ததும் பார்த்தேன் ....
தொலைந்து போயிற்று....

நடந்தது கனவோ?
என
நான் எழுகையில்
நடந்த
சம்பவங்களுக்கு சாட்சியாய்
என்
உடலெங்கும்
நகக்கீறல்கள்...

மனது வலித்தது...

அதன் பிறகு
அதை
நான்
மீண்டும்
சந்திக்கவேயில்லை...

அந்த
ஓர் இரவுக்குள்
நானும் அதுவும்
பேசிய விஷயங்கள்
பரிமாறிய நேசம்
என்
நெஞ்சில் பதிந்த
நினைவுத் தடங்கள்..

இப்போதும்
அதே தென்றல் காற்று
அதே தவளைகளின் சத்தம்
அதே ஒற்றைத் தெருவிளக்கு

ஆனால்
கடந்து போகையில்
கனத்துப் போகும்
என் இதயம்...

மௌனித்துப்போன - என்
இரவு நேரங்களில்
இனி
யாரோடு நான் பேசுவேன்.... 


என்றென்றும் அன்புடன்
இரா. கு. இராம் சுந்தர்